டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் நடித்த அமலாபால், அதையடுத்து அசின், நயன்தாரா போன்று நாமும் புகழ் பெற வேண்டுமென்று கோடம்பாக்கத்துக்கு வந்தார். வந்த அவருக்கு எதிர்பார்த்தபடி பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், வீரசேகரன் என்ற படத்தில் வீரசமருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து, சிந்துசமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்தார்.
ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதனால் அதன்பிறகு தனது பாதையை மாற்றியவர், இமேஜை பாதிக்காத வேடங்களில் நடித்து வந்தார். அப்படி அமைந்த படம் தான் மைனா, அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய பேசப்படும் நடிகையானார். பின்னர் தெய்வத்திருமகள் என்ற படத்தில் டைரக்டர் விஜய் இயக்கத்தில் நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது. என்றாலும், சினிமாவில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்ற ஆசையில் இருந்த அமலாபால், தனது விருப்பத்தை காதலர் டைரக்டர் விஜய்க்கு தெரிவிக்க, அவரும் சம்மதம் தெரிவித்தார். அதனால் அதையடுத்து தனது பேவரிட் ஹீரோக்களின் படங்களாக செலக்ட் பண்ணி ஒரு ரவுண்டு வந்துவிட்ட அமலாபால், இளையதளபதி விஜய்யுடனும் ஒரு படத்தில் டூயட் பாடி விட்டார்.
இந்நிலைவில், சைவம் படத்தின் ஆடியோ விழாவில், விஜய்யுடன் தான் கொண்ட காதலை, அந்த விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் உள்ளிட்ட சிலர் போட்டு உடைத்து விட்டதால், வேறு வழியில்லாமல் இப்போது நடிப்புக்கு முழுக்குப்போடும் நிலைக்கு ஆளாகியுள்ளார் அமலாபால். அதனால் கமிட்டான படங்களில் இருந்து விலகி திருமணம் செய்து கொள்ளதயாராகி விட்டார்.
இதையடுத்து அமலாபால் விடுத்துள்ள செய்தியில், சினிமாவில் நான் எத்தனை ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், எனது ரியல் ஹீரோ டைரக்டர் விஜய்தான். அவர்தான் எனக்கு பொருத்தமான ஹீரோ. இப்படி தெரிவித்துள்ள அமலாபால், டைரக்டர் விஜய்யுடன் தான் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை இப்போது வெளியிட்டுள்ளார். அதில் டைரக்டர் விஜய்யை, ரியல் நாயகனாக கருதி அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் அவர்களுக்கிடையே உள்ள நிஜ காதலை பிரதிபலிக்கும் வகையில் வெளியாகி உள்ளன.