தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே, பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். ஆனால் சமீபகாலமாக மார்க்கெட்டில் அவர் பின்தங்கியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த ஈசா, கெளரவர்கள், புவனக்காடு போன்ற படங்கள் வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு ஓடி விட்டதால், இப்போது விக்னேஷை வைத்து படமெடுக்கவே ஆளில்லை.
அதனால், தற்போது அவரே தயாரிப்பாராக உருவெடுத்திருக்கிறார். தன்னை சினிமாவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்தவர், இப்போது ஒரு வித்தியாசமான கதையை செலக்ட் பண்ணி அதை படமாக்கிக்கொண்டிருக்கிறார். படத்தை பார்க்கும்போது நான் நெகடீவ் ரோலில் நடித்திருப்பது போன்று தெரியும். ஆனால் அந்த கேரக்டர் செய்கிற விசயம் நியாயமானதாகவே இருக்கும். அந்த வகையில், ரசிகர்களின் மனதில் பாசிடீவாகவே அந்த கேரக்டர் பதியும். அப்படியொரு மாறுபட்ட கதை என்கிறார் விக்னேஷ்.
மேலும், இந்த படத்திற்கு முதலில் பூனை என்றுதான் பெயர் வைத்திருந்தனர். ஆனால், பின்னர் பனிமூட்டம் என்று மாற்றினர். ஆனால், அப்படத்துக்கு இசையமைக்கும் கார்த்திக்ராஜா, இந்த டைட்டீல் நன்றாக இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாராம். அதனால், பல நாட்களாக மூளையைப்போட்டு கசக்கி இப்போது மாற்றம் என்று தனது படத்திற்காக புதிய பெயரை சூட்டியிருக்கிறார் விக்னேஷ்.
இந்த மாற்றம் படமாவது விக்னேஷ்க்கு ஒரு மாற்றத்தைக் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.