ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் படத்தையடுத்து தற்போது சலீம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த படத்தை மிகப்பெரிய படமாக்கி விட வேண்டும் என்பதற்காக, கதை விவாத்திற்குள்ளும் நுழைந்து புதுமைகளை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே, அடுத்தபடியாக தான் நடிக்கப்போகும் படத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் என்று பெயர் வைத்தும் சமீபத்தில் பப்ளிசிட்டி செய்தார்.
அந்த விளம்பரங்களில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடக்கும் பிரச்னைகளை சொல்லப்போவது போன்றும் பெரிய அளவில் பில்டப் கொடுத்திருந்தார். ஆனால், அந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது என்பதை விசாரித்தபோது, இதற்காகவா இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றியது.
அதாவது, அப்படம் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் பிரச்னையை மையமாகக்கொண்டுதான் உருவாகிறதாம். அந்த பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை போன்று பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் நீண்டு கொண்டே போகிறதாம். கடைசியில், இன்னொரு பெண் கேரக்டர் உள்ளே புகுந்துதான் அவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்கிறதாம். ஆக, பக்கா ஒரு குடும்ப பிரச்னை படத்துக்குத்தான் ஒரு நாட்டுப்பிரச்னையை சொல்ல வருவது போன்று பில்டப் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.