ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
சில படங்களில் ஹீரோவாக நடித்த கே.ர.ராகுல் முதன் முறையாக கலர் கண்ணாடிகள் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் அஸ்வின் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யா ஸ்ரீதரன் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் திருநங்கை ஜோதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இனியவன் இசை அமைத்திருக்கிறார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துள்ளது.
இதுபற்றி இயக்குனர் கே.ர.ராகுல் கூறியதாவது: தமிழ் நாட்டில் இருந்து மலேசியாவில் உள்ள மது பாருக்கு இசை கலைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் செல்வார்கள். அப்படி செல்லும் ஒரு பாடகனுக்கும், அந்த பாருக்கு வரும் இளம் பெண்ணுக்கும் காதல் வருகிறது. திடீரென ஹீரோயினுக்காக ஒரு காரியம் செய்யப்போய் ஹீரோ மலேசியாவின் அண்டர்கிராவுண்ட் நெட் ஒர்க்கிற்குள் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தோட கதை.
படத்தின் நாயகி மலேசியாவை சேர்ந்தவர். நாயகன் எவ்வளவு தேடியும் கிடைக்வில்லை. நாயகன் இல்லாமலேயே தமிழ்நாட்டில் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டோம். சென்னை புறநகரில் ஷூட்டிங் நடந்போது அதை வேடிக்கை பார்க்க வந்தவர்தான் அஸ்வின். அவரை பார்த்ததும் என் மனதில் இருந்த முகமாக இருந்ததால் அவரை நடிக்கிறீங்களான்னு கேட்டேன் அவரும் சம்மதித்தார். அதன் பிறகு ஒரு மாதம் அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறோம் என்றார் ராகுல்.