தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாக்கள் வெளிநாட்டில் உருவாவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க துபாயில் உருவாகி இருக்கும் படம் திருந்துடா காதல் திருடா. ஆதில், சுதக்ஷினா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரஞ்சித் இசை அமைக்கிறார், சனல் தோட்டம் ஒளிப்பதிவு செய்கிறார். துபாயில் வாழும் மலையாளிகள் இணைந்து உருவாக்கி இருக்கும் தமிழ் படம். ஹீரோயின் மட்டும் சென்னை பொண்ணு.
படம் உருவான விதம் பற்றி இயக்குனர் அசோக் ஆர்.நாத் கூறியதாவது: நான் மலையாளத்தில் 4 படங்கள் இயக்கி இருக்கிறேன். இது எனக்கு 5வது படம். துபாயில் வாழும் தமிழர்களும், மலையாளிகளும் எனக்கு நண்பர்கள். எங்களை வைத்து ஒரு படம் பண்ணித் தரமுடியுமா என்று கேட்டார்கள். அதனால் இந்தப் படத்தை இயக்குகிறேன். நூறு ஆண்டுகளுக்கு பிழைப்புக்காக துபாய் சென்றவர்கள். 20 வருடங்களுக்கு முன்பு பணம் சம்பாதிக்க துபாய் சென்றவர்கள். இப்போது படித்துவிட்டு கவுரவமான வேலைக்கு சென்றுள்ளவர்கள் என மூன்று தலைமுறையினர் துபாயில் வசிக்கிறார்கள். அவர்களுக்கிடையே சின்ன சின்ன உரசல்கள் வரும். அதனை மையமாக வைத்து அதற்குள் ஒரு காதலையும் வைத்து சொல்கிற படம். முழு படத்தையும் துபாயில் எடுத்து முடித்துவிட்டோம். விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம். என்றார்.