தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கு சினிமாவில் நம்பர்-ஒன்னாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று விடாமுயற்சி செய்து வந்தவர். தற்போது விஜய், சூர்யா, விக்ரம் என மூன்று முப்பெரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவிலும் சமந்தாவின் கொடி வேகமாக பறக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த நேரத்தில், அக்ஷய்குமார் நடிக்கும் ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்கும் சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளதாம். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் கெளதம்மேனன் இயக்கியபோது அதில் தமிழில் நடித்த வேடத்தில் இந்தியிலும் சமந்தாதான் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் இந்தி சினிமாவில் நடிக்க முயற்சி எடுக்கவில்லை.
ஆனால், இப்போது ஒரு பெரிய வாய்ப்பு வலிய வீடு தேடி வந்திருப்பதால், இதைவிட மனமில்லாமல் மும்பை சென்று அந்த படத்தில் கமிட்டாகி விட்டு வந்திருக்கிறார் சமந்தா. அதனால் இதுவரை தமிழ், தெலுங்கு என இரண்டு வழிப்பாதையில் பயணித்த சமந்தா, இனி மூன்று வழிப்பாதையில் பயணிக்கப்போகிறாராம்.
இதையடுத்து, ஒருவேளை இந்தி படம் ஹிட்டாகி அதிக படங்கள் கமிட்டாகி விட்டால், அசின் பாணியில் பாலிவுட் நடிகையாகி விடுவீர்களோ? என்று சமந்தாவை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு, இந்தி சினிமா மீது நான் எப்போதுமே ஆர்வம் கொண்டதில்லை. தானாக வந்த வாய்ப்பை உதாசீனம் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். அதோடு அக்ஷய்குமார் என்னைக்கவர்ந்த நடிகர். மற்றபடி, இந்த படத்தின் ரிலீசுக்குப் பிறகுதான் எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார் சமந்தா.