மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தப்பு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷகீலா. அதனால்தானோ என்னவோ அதையடுத்து அவர் தப்பு தப்பான கேரக்டர்களாகே செலக்ட் பண்ணி நடித்தார். லயம், மாமி, ஆஸ்டல், ராக்கிளிகள், டியர் சினேகா, பருவம் என காமக்கொடூர படங்களாக நடித்து மலையாள சினிமாவில் வீறு நடை போட்டு வந்தார் ஷகீலா. அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் அலைமோதியதால், ஒவ்வொரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வந்தன.
அந்த அளவுக்கு மலையாள இன்டஸ்ட்ரியையே கலக்கிக்கொண்டு வந்தார் ஷகீலா. ஆனால், ஒரு கட்டத்தில் அவரது உடம்பு பூதாகரமாக பெருத்து விட்டதையடுத்து அவரது கவர்ச்சிக்கு மவுசு குறைந்து போனது. அதனால், மீண்டும் தமிழுக்கே வந்து கிளுகிளுப்பான காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருகிறார் ஷகீலா. அந்த வகையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், குரு சிஷ்யன், ஆசாமி என பல படங்களில சமீபகாலமாக அவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில, தற்போது ஷகீலாவுக்கும் சொந்தமாக படம் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை தனது தாய்மொழியான தெலுங்கில் இயக்குகிறாராம்.
இதுபற்றி ஷகீலா கூறுகையில், படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த வாய்ப்புக்காக நானாக முயற்சி எடுப்பதற்கு முன்பே அதுவாக அமைந்து விட்டது. இப்படத்தில் துளியும் கிளாமர் இருக்காது. ஒரு பெண்ணை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இந்த சமுதாயத்தில் அவள் சந்திக்கிற பிரச்னைகள், போராட்டங்களைத்தான் படமாக்குகிறேன்.
மேலும், இந்த படத்தையடுத்து, எனது சொந்த கதையையும் படமாக்கப்போகிறேன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அப்படம் தயாராகிறது. அந்தக் கதையில் நானே நாயகியாக நடிப்பேனா இல்லை, வேறு நடிகையை நடிக்க வைத்து விட்டு நான் இயக்குனராக மட்டுமே இருப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் ஷகீலா.