இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நாளை நடைபெற இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலை புறக்கணிக்க தமிழ்திரையுலகம் முடிவு செய்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம். கலை இயக்குனர்கள் சங்கம் முதல் லைட்மேன் யூனியன், டிரைவர்கள் யூனியன் வரை இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. தற்போது தலைமை சங்கமான பிலிம் சேம்பரிலும் இரண்டு அணிகள் உருவாகியுள்ளது. தற்போது நிர்வாகத்தில் உள்ள கல்யாண் தலைமையிலான அணி மீது கே.ராஜன் தலைமையிலான எதிர் அணியினர் கோடிக்கணக்கில் ஊழல் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கே.ராஜன் கூறியதாவது: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நாளை 27ந் தேதி தேர்தல் நடக்கிறது. எங்கள் அணியின் சார்பில் நான், கமீலா நாசர் உள்ளிட்டோர் போட்டியிடுகிறோம். ஆனால் தேர்தல் முறைப்படி நடக்காது என்றே தெரிகிறது. ஒருவரே நிறைய ஓட்டுக்கள் போடும் பிராக்சி முறையில் தேர்தல் நடத்துகிறார்கள். அந்த கணக்கில் அவர்களுக்கு நிறைய ஓட்டுகள் இருக்கிறது. அதானால்தான் கல்யாண் அணியினர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். தமிழ் தயாரிப்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தலை சந்திப்பதா வேண்டாமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தலைமையில், தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் ராஜன், கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர், தென்னிந்திய வர்த்தகசபையில், தமிழ் திரையுலகினருக்கு முக்கியத்துவம் தரப்படாததால் நாளை நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.