‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கேயார், திரையுலகில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர். தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநராகவும், விநியோகஸ்தராகவும், திரையரங்கு உரிமையாளராகவும், பைனான்சியராகவும் இயங்கிய வகையில் திரையுலகின் அத்தனை நெளிவுசுழிவுகளும் அவருக்கு அத்துப்படி. அதனால்தான் அவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர் தயாரிப்பாளர்கள்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்ற நாள் முதலே கேயாருக்கு தலைவலிதான். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற தாணு நீதிமன்றத்தில் தினம் ஒரு வழக்குப்போட்டு டென்ஷன் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் சங்கத்தின் செயலாளரான ஞானவேல்ராஜாவின் நடவடிக்கை. உறுப்பினர்களின் நலனை மனதில் கொள்ளாமல் தன் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பல காரியங்களை செய்கிறாராம். அப்படி அவர் செய்யும் காரியத்தினால் தயாரிப்பாளர்கள் பலர் பாதிக்கப்படுகிறார்களாம்.
இது பற்றி நிர்வாகிகள் யாராவது தட்டிக் கேட்டால், அவர்களுக்கு பண உதவி மற்றும் வேறு சில சகாயங்களை செய்து வாயை அடைத்துவிடுகிறாராம். ஞானவேல்ராஜாவின் நடவடிக்கையினால் தலைவரான கேயார் டம்மியாக்கப்பட்டுவிட்டார் என்ற எண்ணம் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்களின் மனக்குறை கேயாரின் காதில் விழுமா?