பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
1100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் ராஜ ராஜ சோழனின் போர்வாளை மையமாகக் கொண்டு உருவாகும் படம்தான் ராஜராஜ சோழனின் போர்வாள். இப்படத்தில் பாடலாசிரியர் சினேகன் நாயகனாக நடிக்கிறார். சரித்திர கால காட்சிகள் அப்படத்தில் ஒரு 25 நிமிடம்தான் வருகிறது என்றாலும். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்களாம்.
அதிலும், போர்வாள்தான் படத்தின் மையம் என்பதால், அதுபற்றி ரொம்ப விவரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த வாள் பற்றிய தகவல்களை தஞ்சை பகுதியில் விசாரித்தபோது யாருக்குமே தெரியவில்லையாம். கடைசியாக, கல்வெட்டுகளில் அந்த வாள் பற்றிய செய்தியை கண்டு பிடித்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஊருக்கு சென்று தகவலை சேகரித்தார்களாம்.
இதுபற்றி சினேகன் கூறுகையில், ராஜராஜ சோழன் தனது காலத்தில், போர் வாள்களை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையாளூர் என்ற ஊரில் உள்ள பட்டறைகளில்தான் செய்து வந்திருக்கிறார்கள். 14 கிலோ எடையுள்ள அந்த வாள்களின் உயரம் 4.5 அடியாம். அத்தனை பெரிய வாளை தூக்கி அந்த காலத்து வீரர்கள் சண்டை செய்திருக்கிறார்கள். அதனால் போர் வாள் பற்றி சொல்லும்போது அது செய்யப்பட்ட அந்தந்த பகுதிகளிலேயே படமாக்கப்போவதாக சொல்லும் சினேகன், இந்த காலத்து மக்களுக்கு இது அரிய தகவலாக இருக்கும் என்கிறார்.