அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது |
பொன்மாலைப்பொழுது என்ற படத்தில் அறிமுகமானவர் ஆதவ் கண்ணதாசன். கவியரசு கண்ணதாசனின் பேரனான இவரை அதன்பிறகு எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. ஆனால், கிருஷ்ணா நடித்துள்ள யாமிருக்க பயமே படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அதோடு, அப்படத்தில் ஒரு வேடத்தில் ஆதவ் நடித்திருப்பதாகவும் மேடையில் தெரிவித்தார்கள்.
இதையடுத்து, முதல் படம் தோல்வியடைந்து சரியான வாய்ப்புகள் அமையாததால், ஆதவ் கேரக்டர் நடிகராகி விட்டதாக அனைவரும் எண்ணிக்கொண்டனர். ஆனால் இதுபற்றி ஆதவ் கண்ணதாசனிடம் நாம் கேட்டபோது, யாமிருக்க பயமே படத்தில் கிருஷ்ணாதான் ஹீரோ. ஆனால் நானும் ஒரு ரோலில் நடித்திருக்கிறேன். அது கெஸ்ட் ரோல் அல்ல, அந்த படத்தின் கதைக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெசலான ரோல். அது ஒரு தனி போர்சனாக இருக்கும். அதன்காரணமாகவே நடித்தேன். அந்த வேடத்தில் நடித்ததினால் எனது ஹீரோ இமேஜ்க்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்.
மேலும், பொன்மாலைப்பொழுது படத்திற்கு பிறகு பல கதைகள் கேட்டு அதில் இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறேன். கூடிய விரைவிலே அந்த படங்கள் தொடங்கவிருக்கின்றன. என்றாலும அதுபற்றிய செய்தியை நான் கொடுப்பதை விட அவர்கள்தரப்பில் கொடுப்பதுதான் சரி என்பதால், அதுபற்றிய தகவலை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை.
அதோடு, அடுத்தடுத்து நடிக்கிறதுக்காக நல்ல ஸ்கிரிப்ட், நல்ல டீமுக்காகவும் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் ஆதவ் கண்ணதாசனுக்கு, இப்போதைக்கு நெகடீவ் ரோல் பண்ணும் ஆர்வமெல்லாம் இல்லையாம். பாசிடீவான ஹீரோவாக நடிக்கவே விரும்புவதாகவும் சொல்கிறார்.