இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
படத்தயாரிப்பாளர்கள் இயக்குநராவது புதிய விஷயமில்லை. கடந்த காலங்களில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரே விஷயம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். பல தயாரிப்பாளர்கள், விவரம் தெரிந்த அஸோஸியேட் டைரக்டரை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இயக்குநர் என்று தன் பெயரைப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் என்ற படநிறுவனம் சார்பில் 'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'வில்லா-2', 'தெகிடி' ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் வெற்றியடைந்தது மட்டுமல்ல, வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களாகவும் இருந்தன. அதை வைத்து சி.வி.குமாரை விஷயம் உள்ள தயாரிப்பாளராக திரைப்படத்துறையினர் கருதினர்.
தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் 'முண்டாசு பட்டி', 'லூசியா' உட்பட சில படங்கள் தயாராகி வருகின்றன. அப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சி.வி.குமார் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். தான் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளார் சி.வி.குமார்.