ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமா பின்னணி பாடகி சின்மயி, மற்ற பாடகிகளில் இருந்து சற்று வேறுபட்டவர். சமூக வலைத்தளங்களில் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்லும் துணிச்சல் மிக்கவர். சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் வருகிற மே 6ந் தேதி திருமணம் நடக்கிறது. ராகுல் ரவீந்தர் மாஸ்கோவின் காவேரி, விண்மீன்கள், வணக்கம் சென்னை படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகர். சின்மயியும், ராகுலும் பேஸ்புக்கில் அறிமுகமாகி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
தற்போது சின்மயி திருமண அழைப்பிதழ்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி வருகிறார். அந்த அழைப்பிதழில் உறவினர்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
"என் திருமணத்திற்கு உங்கள் அன்பான வாழ்த்துக்களும், ஆசியும் மட்டும் போதும். அன்பளிப்புகளோ, பூச்செண்டுகளோ கொண்டு வரவேண்டாம். கட்டாயம் அன்பளிப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறவர்கள். அந்த பரிசை பணமாகவோ, காசோலையாகவோ லடாக்கில் உள்ள மலைவாழ் மக்களின் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கவும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து சின்மயின் அம்மா கூறும்போது: இன்றைய விலைவாசி நிலவரப்படி ஒரு மலர்கொத்தின் குறைந்தபட்ச விலை 500 ரூபாய். திருமணம் முடிந்த அன்று மாலையே அது மூலையில் கிடக்கும். அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும். அது வீண் ஆடம்பரம்தானே. அந்த பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு தரலாமே என்றுதான் இந்த முடிவு. நல்லவர்களின் ஆசியும், வாழ்த்தும் மட்டுமே எங்களுக்கு போதும் என்கிறார்.