தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா பின்னணி பாடகி சின்மயி, மற்ற பாடகிகளில் இருந்து சற்று வேறுபட்டவர். சமூக வலைத்தளங்களில் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்லும் துணிச்சல் மிக்கவர். சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் வருகிற மே 6ந் தேதி திருமணம் நடக்கிறது. ராகுல் ரவீந்தர் மாஸ்கோவின் காவேரி, விண்மீன்கள், வணக்கம் சென்னை படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகர். சின்மயியும், ராகுலும் பேஸ்புக்கில் அறிமுகமாகி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
தற்போது சின்மயி திருமண அழைப்பிதழ்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி வருகிறார். அந்த அழைப்பிதழில் உறவினர்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
"என் திருமணத்திற்கு உங்கள் அன்பான வாழ்த்துக்களும், ஆசியும் மட்டும் போதும். அன்பளிப்புகளோ, பூச்செண்டுகளோ கொண்டு வரவேண்டாம். கட்டாயம் அன்பளிப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறவர்கள். அந்த பரிசை பணமாகவோ, காசோலையாகவோ லடாக்கில் உள்ள மலைவாழ் மக்களின் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கவும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து சின்மயின் அம்மா கூறும்போது: இன்றைய விலைவாசி நிலவரப்படி ஒரு மலர்கொத்தின் குறைந்தபட்ச விலை 500 ரூபாய். திருமணம் முடிந்த அன்று மாலையே அது மூலையில் கிடக்கும். அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும். அது வீண் ஆடம்பரம்தானே. அந்த பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு தரலாமே என்றுதான் இந்த முடிவு. நல்லவர்களின் ஆசியும், வாழ்த்தும் மட்டுமே எங்களுக்கு போதும் என்கிறார்.