மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கோல்ட் பிஷ் படம் விருது வாங்கினாலும் வாங்குச்சு. அது ஒரு கோல்ட் வாரையும் ஆரம்பிச்சி வச்சிருக்கு. படத்தோட கதை கேட்டு பிடித்து "இந்த படம் ஓடலேன்னாலும் பரவாயில்லை. எனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை நான் தயாரிக்கிறேன்"னு சொல்லி தயாரிச்சவர் ஆயிரம் வாரணங்களை காக்க காக்க என்று காக்கும் இயக்குனர். படம் முடிஞ்சதும் பல்வேறு நிதி சிக்கல்கள்ல மாட்டி ரிலீஸ் பண்ண முடியாம தவிச்சபோது படத்தை அவுட் ரேட்டுக்கு வாங்கி ரிலீஸ் பண்ணினவரு இன்னொருத்தர். இப்போ படத்தோட தயாரிப்பாளர் யாருங்றது பிரச்னை.
ஜனாதிபதி கையால விருதை வாங்கப்போறவரு யாரு? ஆயிரம் வாரணம் வச்சிருக்கிறவரா? படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினவரா?. இதுல நடுநிலைமையோடு இருக்க வேண்டிய கோல்ட் பிஷ் டைரக்டர் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினவர்தான் புரட்யூசர் அவர்தான் விருதை வாங்கணும்னு சொல்றாராம். காரணம் தமிழ் கற்ற இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிச்சிக்கிட்டிருக்கவரு அவர்தானே. இப்போ பிரச்னை தயாரிப்பு சங்கத்துக்கும், இயக்குனர் சங்கத்துக்கும் போயிருக்கு.