கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபகாலமாக நடிகர், நடிகைகளைப்பற்றிய வதந்திகள் சொடக் போடும் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அதனால் அவர்கள் ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் சில நடிகர்கள், டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதில் தங்களைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்கள். சிலசமயங்களில் தவறான செய்திகள் வெளியானாலும் அதற்கு உடனே பதில் கொடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சிம்பு, தனுஷ், ஹன்சிகா, சிவகார்த்திகேயன், வடிவேலு, கெளதம்மேனன் உள்பட பலர் பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நேற்று முதல் சந்தானமும் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதை அறிவித்துள்ளார். இப்படி திடுதிப்பென்று அவர் டுவிட்டர் கணக்கு தொடங்க காரணமே, சமீபத்தில் மனைவியை விட்டு அவர் பிரிந்து விட்டதாக வெளியான செய்திதானாம். இந்த செய்தியால் ரொம்பவே மனசுடைந்து விட்டாராம் சந்தானம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று யோசித்த பின்னரே அவருக்கு இந்த டுவிட்டர் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டதாம்.
இனிமேல், தன்னைப்பற்றிய செய்திகளை இந்த டுவிட்டரில் உடனுக்குடன் தெரிவிக்க திட்டமிட்டுள்ள சந்தானம், ரசிகர்கள் கேட்கும் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்போகிறாராம்.