ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியல்வாதிகள் தங்களைச் சுற்றி தொண்டர்படை, குண்டர் படை, பூனைப் படை, புலிப்படை என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள். இதே பாணியை இப்போது சினிமா நட்சத்திரங்களும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதை ஆரம்பித்து வைத்தவர் சிவகார்த்திகேயன், மான் கராத்தேவின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு குண்டு குண்டான பவுன்சர்களின் பாதுகாப்போடு வந்தார் சிவகார்த்திகேயன். அதே பவுன்சர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பிக்களையும், மீடியாக்களையும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கினார்கள். இந்த விஷயம் பெரிதாகவே இதற்காக மீடியாவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன் பவுன்சர்களை நான் ஏற்பாடு செய்ய வில்லை என்று நழுவிக் கொண்டார்.
அதன் பிறகு விக்ரம் பிரபு பவுன்சர்கள் பாதுகாப்போடு அரிமா நம்பி பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தார். அதே பிரச்னைகள்தான் அன்றும் நடந்தது. அதேப்போல் சந்தானம் ஷோலா ஹீரோவாக களம் இறங்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இதே நிலை தான். இந்தவிழாவின் அந்த தியேட்டரின் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டது. இப்போது பவுன்சர்கள் பாதுகாப்போடு வளைய வருவதுதான் ஹீரோக்கள் தங்கள் இமேஜாக நினைக்கிறார்கள். முன்பு விலை உயர்ந்த கார்கள் ஹீரோக்களின் இமேஜ் அடையாளமாக இருந்தது. இப்போது பவுன்சர்கள் இமேஜ் அடையாளமாக மாறியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம் பிரபு, சூர்யா, கார்த்திக், சந்தானம் உள்ளிட்ட பலர் பவுன்சர்களோடுதான் படப்பிடிப்பிற்கே வருகிறார்களாம். நடிகைகளில் நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா பவுன்சர்கள் பாதுகாப்பு வைத்திருக்கிறார்கள். இந்த செய்தியை சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு... தனியார் டிவி ஒன்றின் இரும்பு கேட்டுக்கு முன் ஒரு கார் வந்து நிற்கிறது. வாட்ச்மேன், "வெளி வாகனத்துக்கு உள்ளே அனுமதியில்லை ரோட்டின் ஓரத்திலேயே நிறுத்துங்கள்" என்கிறார். வாட்ச் மேனை காருக்குள் இருந்த ஒரு கை அழைத்தது. அருகில் சென்றார் வாட்ச் மேன். "கண்ணா... நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன். ஒரு இண்டர்வியூவிற்கு வரச் சொன்னாங்க. கார் உள்ளே போறதுக்கு பர்மிஷன் தர்றீங்களா?" என்றது அந்தக் குரல். உடல் வியர்த்துப்போன வாட்ச்மேன் கேட் கதவை திறந்து விட்டு இண்டர்காமில் விஷயத்தை சொல்ல ஓடிவந்திருக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். தனி ஆளாக காரிலிருந்து இறங்கிய சூப்பர் ஸ்டார். பேட்டி கொடுத்து விட்டு தனி ஆளாக அதே காரில் திரும்பினார்.