பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் சூரி குளுவினரோடு அறிமுகமானவர் அப்புக்குட்டி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். அப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து மன்னாரு படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படம் சரியாக போகவில்லை. இதனால் மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர், மேல், ஒன்பது புலி சம்பத், எங்க காட்டில் மழை தவிர இன்னும் சில பெயரிடப்படாத படங்களிலும் நடித்து கொண்டு பிஸியாக வலம் வருகிறார்.
மேல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அப்புக்குட்டியிடம் நாம் சந்தித்து பேட்டியெடுத்தோம். அப்போது, உங்களோடு அறிமுகமான சூரி எங்கேயோ போய்டாரே அப்பு, நீங்கள் எப்போது பெரிய படங்களில் இன்னும் ஜொலிக்க போறீங்க என்று கேட்டால்... என் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை எவ்வளோ முக்கியம் என்பதை உணர்ந்து நடிக்கிறேன். வெறும் காமெடி மட்டும் இல்லாமல் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நான் நடிக்கிறேன். சூரி அணுகுமுறை வேறு, என் அணுகுமுறை வேறு. எனக்கென்று தனித்துவம், நடிப்பு, எல்லாமே இருக்கிறது. இப்போது நான் தனி டிராக் பண்ணி கொண்டிருக்கேன். ஒவ்வொரு படத்திற்கும் ஏதேனும் ஒரு விஷயம் புதுசா சொல்ல ஆசைபடுறேன். அதற்காக உழைக்கவும் செய்கிறேன். எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்று அடித்து சொல்கிறார் அப்புக்குட்டி.