நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
புதுமுக இயக்குனர் அருள் இயக்கத்தில், புஷ்கர் ராஜ்குமார், நேகா என்ற புதுமுகங்களோடு, அப்புகுட்டி நடித்துள்ள படம் மேல். இப்படத்தின் இசை வெளியீடு இன்று காலை நடைபெற்றது. இசை அமைப்பாளர் உதயா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் இயக்குனர் ஸ்டான்லி கலந்து கொண்டு வாழ்த்தினர். இவ்விழாவில் இசை வெளியீட்டை சதீஷ் வெளியிட, இசை கலைஞர்ர்கள் பெற்றுக் கொண்டனர். இளையராஜாவிடம் பணியாற்றி வரும் சேச்சா மற்றும் தெக்ஷ்ணா மூர்த்தி, தளபதி, லக்ஷ்மி நாராயணன், செபாஸ்டின், மோகன், லோகேஷ், இம்மானுவேல், குரு, கற்பகம் உள்ளிட்ட பலர் இசைதட்டை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய இயக்குநர் அருள், மேல் என பெயர் வைத்ததற்கு விளக்கம் அளித்தார். இதுவரை வந்த சினிமாக்களில் காதல் இல்லாமல் நட்பு சொல்லப் படவில்லை, யதார்த்தமான வாழ்வியல் நட்பு வாழ்க்கை முறை தான் இந்த படம். இருபாலினத்தில் ஆண்கள் நட்பை இறுதி வரை வெல்ல முடிகிறது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தொடர முடிவதில்லை. பெண்களின் உணர்வுகள் இது வரை சொல்லப்படாத கதை இந்த 'மேல்' படம். இந்த படம் சினிமாத்தனம் இல்லாத ஒன்று. கண்களை உறுத்தும் ஆடை ஆபரணங்கள், மேக்கப் என்று இல்லாமல் யதார்த்தத்தை, நாகர்கோயில் முழுக்க படமாக்கி உள்ளோம். நம்பிக்கையும், பொறுமையும் வெற்றியை எட்டி பிடிக்கும் இரு கரங்கள். அதை உணர்ந்தால் மற்றவரை விட நாம் மேல் என்ற கருத்து எல்லார் மனதிலும் நிற்கும் என்கிறார் இயக்குனர்.