ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நாதஸ்வரம், காலபைரவன் தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தர்ஷினி, தேவதை தொடரில் "வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை" என்கிறார் தர்ஷினி. மேலும் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
நாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். அமைதியான பெண்ணாகவும், பிறரை அழ வைக்கிற செண்டிமெண்ட் பெண்ணாகவும் நடிக்கிறேன். இதைப் பற்றி அதிகம் கேட்காதவர்க்ள தேவதை தொடரில் வில்லியாக நடிப்பது பற்றி மட்டும் தவறாமல் கேட்கிறார்கள். பார்க்கிறதுக்கு அமைதியான பொண்ணா, அழகான பொண்ணா இருக்கிறீங்க, நீங்க ஏன் வில்லியா நடிக்கிறீங்க என்கிறார்கள். நீயா அப்படி நடிக்கிறாய் என்று ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இது, அந்த கேரக்டர் கொடுக்கும் கிரடிட்டாகத்தான் பார்க்கிறேன்.
சீரியலில் வில்லியாக நடிப்பது எவ்ளோ கஷ்டம் என்பது பலருக்குத் தெரியாது. ஷாட் இல்லாத நேரத்துல அப்படி சிரிச்சு பேசிக்கிட்டிருப்போம் ஷாட்ல முறைக்கணும். இது அடுத்தடுத்த நிமிடத்துல நடக்கும். ஆனாலும் வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. தேவதையில் திட்டினாலும், நாதஸ்வரத்தில் பாராட்டுறாங்களே. இரண்டு தரப்பும் என்மேல அன்பு வச்சிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிறேன் என்கிறார் தர்ஷினி.