பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து, நாளை(ஏப்ரல் 24ம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது கடமையை ஆற்ற ஓட்டுப்போட தயாராகிவிட்டனர். ஓட்டளிப்பது நமது கடமை என திரைபிரபலங்களும் தங்களது தேர்தல் பிரசாரத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நம் ஓட்டு நம் உரிமையை (ஓட்டுப்போடுவது) பற்றி திரைபிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...
ஓட்டளிக்க தவறியவனுக்கு கேள்வி உரிமை இல்லை - வைரமுத்து, கவிஞர்
இந்தியா, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதற்கு இந்த தேர்தல் தான் அடையாளம். இதுவரைக்கும் உலகில் நிலவிய ஆட்சி வடிவங்களில், குறைந்த தீமை உடையது இந்த ஜனநாயகம் தான். தங்கள் எஜமானர்களை, கடைக்கோடி மனிதனும் தீர்மானிக்கும் உரிமை தந்ததும் இந்த தேர்தல் முறைதான். ஓட்டு போடும் கடமையை செய்கிறவன், இந்த உரிமையை சரியாக பயன்படுத்துகிறான். அரசியல்வாதிகள் ஆயிரம் கனவு கண்டாலும், ஒவ்வொரு முறையும் இந்திய வாக்காளன், தான் நினைக்கும் தீர்ப்பை தர தயங்கியது இல்லை. ஓட்டளிப்பது கடமைபோல ஒரு உரிமை. உரிமைபோல ஒரு கடமை. ஓட்டளிக்க தவறியவனுக்கு, கேள்வி கேட்க உரிமை இல்லை; எனவே, தவறாமல் வாக்களியுங்கள்.
ஓட்டு போடுவது இனிமையான அனுபவம் - சிவகார்த்திகேயன்
கல்லூரி படிப்பு முடிந்ததும், திருச்சியில், முதல் ஓட்டுப்போடும் வாய்ப்பு கிடைத்தது; மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நானே போய், சென்னையில் ஓட்டுப்போட இடமாறுதலுக்கு விண்ணப்பித்தேன். வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும், நல்ல வேளையாக வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துவிட்டது. பூத் சிலிப்பும் தந்துவிட்டனர். நான் காலை,7:00 மணிக்கே ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட உள்ளேன். ஓட்டுபோடுவது, நமது உரிமை, கடமை. யாரையும் குறைசொல்லிக் கொண்டு, நம் உரிமையை நிலைநாட்ட, கடமையை செய்யாமலிருக்க கூடாது. நம் ஓட்டு, நாட்டை ஆள பயன்படுகிறது என, நினையுங்கள்; தவறாமல் ஓட்டுப்போடுங்கள். இந்த ஆண்டு புதிய வாக்காளர்களாக பல லட்சம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். முதல் ஓட்டு இனிமையான அனுபவமாக இருக்கும்; நீங்களே உணர்வீர்கள்.
வேலையை ஒத்திவையுங்கள் - அதர்வா
எந்த வேலை இருந்தாலும், எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஓட்டளிக்க வேண்டும். நாம் நாட்டிற்கு நல்லது செய்யப்போகிறோம் என, நினைத்தால், எப்படியாவது ஓட்டு போட வேண்டும் என, மனதில், ஒருவித சந்தோஷம் ஏற்படும். ஓட்டுப்போட்டால் தான், நாம் உரிமையுடன் கேள்வி கேட்க முடியும். நாம் தேர்வு செய்பவர்கள் ஜெயித்து, ஆட்சியில் பங்கெடுக்கும் போது, நம்ம ஓட்டால் தான் ஜெயித்தார் என, மனசுக்கு திருப்தியாக இருக்கும்.
நம் ஓட்டு ஒரு உந்து சக்தி - அனிருத்
ஒவ்வொருவரும் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. ஒவ்வொரு ஓட்டும், நாட்டுக்கு நல்லது செய்வதாகவும், நாட்டின் நற்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நம் ஓட்டும் ஒரு உந்து சக்தியாகவும் இருக்கும். தேர்தல் அன்று ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது, வீட்டில் இருந்துவிடலாம் என, நினைக்கக்கூடாது. நமது உரிமையை, கடமையை எக்காரணம் கொண்டு தவிர்க்க கூடாது. தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டுமல்ல, அன்று தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை ஊடகங்களில் பார்க்க வேண்டும் என்பதற்காக, என் இசை பணிக்கு நாள் முழுவதும் லீவு போட்டுவிட்டேன்.
ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டு - சிவா
இந்த ஆண்டு காலையிலேயே சென்று ஓட்டுப்போடுவேன். கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட தாமதமாக சென்றபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை; ஓட்டுப்போட முடியாது என, சொல்லிவிட்டனர். ஓட்டுப்போட வந்தவர்களை வேடிக்கை பார்த்து விட்டு திரும்பினேன். இந்த தேர்தலில், அப்படி நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என, வாக்காளர் பட்டியலை நேரில் சென்று பார்த்தேன்; பெயர் உள்ளது. சென்னை, சி.ஐ.டி., நகர் ஆல்பா பள்ளியில் ஓட்டுப்போட, பூத் சிலிப்பும் கொடுத்துள்ளனர். தேர்தலில் நிற்பவர்கள் சரியில்லை என, காரணம் கூறிக்கொண்டு சிலர் ஓட்டுப்போடாமல் தவிர்க்கின்றனர். உங்கள் ஓட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் என, நினைத்து ஓட்டுப்போடுங்கள்.
இந்தியா வல்லரசாக என் முதல் ஓட்டு - தன்ஷிகா
சினிமாவுக்கு வந்து பல படங்களில் நடிச்சாச்சு. இப்பத்தான் முதல் முதலாக ஓட்டுப்போட போகிறேன். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாமல் போனதால், கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட முடியவில்லை. இந்த தேர்தலில் ஓட்டு போட்டு விடவேண்டும் என, ஆர்வம் இருந்தது. வீட்டாரிடம் சொல்லி, விண்ணப்பித்து, ஓட்டுப்போடும் உரிமையை வாங்கிவிட்டேன். என்னோடு நிறைய பேர் முதல் ஓட்டுப்போட உள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம்மால் இந்தியா வல்லரசு ஆகட்டும்.
ஓட்டு போடாவிட்டால் தவறான ஆட்கள் வந்து விடுவார்கள் - மும்தாஜ்
வேட்பாளர்கள் சரியில்லை என, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஓட்டுப்போடாமல் இருந்து விடாதீர்கள். நாம் அப்படி இருந்தால், தேவையில்லாத, தவறான ஆட்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், நாட்டின் வளர்ச்சி தேங்கிவிடும். நாம் போடும் ஓட்டால், நல்லவர்களை ஆட்சிக்கு கொண்டு வர முடியும்; அவர்கள் நல்லாட்சியும் தருவர் என்பதால், ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டுப் போடுங்கள்.
புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள் - விக்ரம்பிரபு
ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை, உரிமை என, தாத்தா சிவாஜிகணேசன் சொல்வார். தேர்தல் நாளில் காலையிலேயே போய் எல்லாரும் ஓட்டு போட்டுங்கள். ஓட்டு உள்ளவர்கள், எக்காரணம் கொண்டும் ஓட்டுப்போடாமல் இருக்க கூடாது என, சொல்வார். வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றும் போது, நமது ஓட்டும் இந்தியாவை ஆள்வதற்கு உதவியாக இருக்கும் என, நினைக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது. இந்த தேர்தலில், 30 லட்சம் புது வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதல் ஓட்டு போடுவது, சந்தோஷமான அனுபவமாக இருக்கும். நாடு நன்றாக இருக்க உங்கள் தேர்வு, நல்லதாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.
விரலில் மை பெருமிதமாக... - சசிகுமார்
ஓட்டு உரிமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாத கடமை. அடித்தட்டு ஏழை மக்களும், தொழிலாளர்களும், கிராமப்புற மக்களும் காத்திருந்து வாக்களிப்பது கவுரவமாக நினைக்கின்றனர். ஆனால், படித்த மக்கள் கியூவில் நிற்கவும், நேரம் ஒதுக்கவும் தயங்கி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற யோசிக்கின்றனர். கருத்து பேசுவதால் மட்டுமே, எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விட போவதில்லை. தேசத்தையே தீர்மானிக்கும் தேர்தலில் கடமை மிகுந்த குடிமகன்களாக கலந்து கொள்வதை சிறப்பு. விரலில் மை பெருமிதமாக
இந்தியன் என்கிற அடையாளம் - இயக்குனர் அமீர்
பெயர் இல்லை என்றால் தனிமனிதனுக்கு அடையாளம் இல்லையோ அதுபோல, ஓட்டுப் போடாவிட்டால் அவனுக்கு இந்தியன் என்கிற அடையாளம் இல்லை. நடுத்தர மக்கள், படித்தவர்கள், தனியார் ஊழியர்கள் அனைவரும் அரசியல் ஒரு சாக்கடை என, தங்களது கையால் ஆகாத தனத்தால் ஒதுக்குகின்றனர். வீட்டில் இருக்கும் சாக்கடையை அப்படி ஒதுக்கி விட முடியுமா? கால் வைத்து இறங்க வேண்டும். தனிமனித ஒழுக்கமும், நேர்மையும், கடமையும் தான் நாட்டை சீர்படுத்தும். இந்தியர் என்றால் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்