தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக வந்து அம்மாவை ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டிருப்பாரே அவர்தான் நிவீக்கா. இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த நிவீக்காவை தமிழ் சினிமா, ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறது. நிவீக்கா அறிமுகமாகும் படத்தின் பெயர் முருகாற்றுப்படை. சரவணன் என்ற புதுமுகம் ஹீரோ. படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு பக்திபடம் என்ற நினைத்து விடவேண்டாம். படம் பற்றி விளக்குகிறார் இயக்குனர் கே.முருகானந்தம்.
"ஹீரோவின் பெயர் முருகன். அவருக்கு 6 நண்பர்கள் கொண்ட படை இருக்கும் முருகனின் ஆறு படை என்பதைத்தான் முருகாற்றுப்படை என்று வைத்திருக்கிறோம் (இப்போ புரியுதுங்களா). சென்னையில் அடிக்கடி காலேஜ் ஸ்டூடண்ட் பஸ் டாப்புல ஏறி பயணம் பண்றது. திடீர்னு மற்ற காலேஜ் ஸ்டூடண்டோடு மோதிக்கிறதல்லாம் நடக்குது. படிக்கப்போன இடத்துல ஏன் இவுங்க இப்படி நடந்துக்குறாங்க என்கிற ரகசியத்தை சொல்லுற படம்.
காலேஜ் காம்ப்ளசுக்குள்ள ஜாதியும், அரசியலும் எப்படி நுழையுது. ஆர்ட்ஸ் காலேஜ் பசங்களும், இன்ஜினீயரிங் காலேஜ் பசங்களும் ஏன் மோதிக்கிறாங்க என்பதை விலாவாரியா சொல்றோம். அதுக்கு இடையில ஒரு லவ் இருக்கு. ஹீரோயின் செலக்ஷனப்போ நெட்டுல பார்த்து தேர்வானவர்தான் நிவீக்கா. தேர்வான பிறகுதான் அவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமா நடிச்சது எங்களுக்குத் தெரியும், நல்லா அழகா இருக்காங்க. நடிப்பும் சுலபமா வருது சீக்கிரமே பெரிய இடத்துக்கு வருவாங்க" என்கிறார். கே.முருகானந்தம்.