கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விளம்பர பட இயக்குனர் ஜெய் இயக்கும் முதல் திரைப்படம் ஆந்திரா மெஸ். ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பூஜா, தேஜஸ்வினி நடிக்கிறார்கள். முகேஷஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார். "இதுமுற்றிலும் புதிய படம். தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு எடுத்துக் செலக்கிற படம்" என்றெல்லாம் பெருமையாக சொல்கிறார் ஜெய்.
அவர் கூறியதாவது: இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவை கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகள் அழகியல் சார்ந்து, புதிய பாணியில் கதை சொல்லியிருக்கிறேன். மேஜிக் ரியலிசம் எனப்படும் பாணியில் இருக்கும். சாதாரண வாழ்க்கையில் நாம் பார்த்திராத இடங்களில் கதை நடக்கும். ஆனால் கதையும், சம்பவமும் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பவையாக இருக்கும்.
படத்தில் ஒரு இந்திப் பாடல் இடம் பெறுகிறது. ராஜ்பரத், மற்றும் தேஜஸ்வனி நடிக்கும் பாடல் நெருக்கமான காட்சிகளை கொண்டதாக இருக்கும். டான்ஸ் மாஸ்டர் விஜி கோரியோகிராபி செய்திருக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருக்கிறது. இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் புனே புறப்பட்டு செல்கிறது" என்கிறார் இயக்குனர் ஜெய்.