கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் மற்றொரு படம் தயாராகிறது. படத்தின் பெயர் - “நண்பர்கள் நற்பணி மன்றம்”. ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெய்நாத் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார்.மற்றும் அன்பாலயா.கே.பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான்அண்ணாச்சி, சிங்கம்புலி, ரவிமரியா, சார்மிளா, சூதுகவ்வும் ராதா, முத்துக்காளை, பிரேமபிரியா, சின்ராசு, விஜய்கணேஷ், சங்கர், மதனகோபால், நாஞ்சில்விஜய், பூங்காவனம், மகேந்திரன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாபாரதியும் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி. இவர் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தை இயக்கியவர். அத்துடன் சரவணன் அறிமுகமான வைதேகி வந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு, காற்றுள்ளவரை, அக்கரைசீமையிலே போன்ற படங்களை இயக்கியவர். வெற்றி பெற்ற ஏராளமான படங்களுக்கு கதாசிரியராகவும் இருந்துள்ளார்.
நண்பர்கள் நற்பணி மன்றம் படம் பற்றி ராதாபாரதியிடம் கேட்டோம்..... “ஊரில் ஒரு பிரச்னை என்றால் நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஓடிப் போய் உதவி செய்து அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். அப்படி பிரச்சனைகளை தீர்க்கும் நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கே காதல் பிரச்னை வரும் போது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து எப்படி பிரச்சனைகளை தீர்க்கிறார்கள் என்பது கதை. ” இதுவரை தனது எல்லா படங்களிலும் தேவாவை வைத்து எல்லா படங்களையும் ஹிட் கொடுத்த ராதாபாரதி முதன் முறையாக ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடலை உருவாக்கி இருக்கிறார்.