தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு அதிரடியான நடிகர் சார்லஸ் ராஜ். இவருக்கு தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடிதான் பூர்வீகம் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்ததெல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். அங்கு மேடை பாடகராக பிரபலமாகி வந்திருக்கிறார். அதோடு ஆஸ்திரேலியாவில் உருவான இளமை இதோ இதோ என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதையடுத்து தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும், பின்னணி பாட வேண்டும் என்ற ஆவலில் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவருக்கு, பட்டிக்காட்டு மாப்பிள்ளை என்ற படத்தில், பரவசம் நவரசம் என்ற பாடலை பாட சான்ஸ் கிடைத்ததோடு, அந்த பாடலில் நடனமாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதையடுத்து ஜெனரேசன் என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தவர், இப்போது தமிழில் ஒளடதம் என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து யாழ் என்ற படத்தில் அகதிகளின் தலைவனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு வந்தது பற்றி சார்லஸ்ராஜ் கூறுகையில், நான் பிறந்து வளர்ந்தது என்னவோ ஆஸ்திரேலியாவாக இருந்தாலும், தமிழ் மீது தீவிர பற்று கொண்டவன். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற வேகம் கொண்டவன். அதன்காரணமாக, ஈழப்போரில் விதவையாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை படமாக்கி அதை உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்கு இலவசமாக போட்டுக்காட்டினேன் என்று சொல்லும் சார்லஸ்ராஜ், இலங்கை போர் காரணமாக அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் விதவை பெண்கள் உள்ளனர். அதை உலகுக்கு உணர்த்தவே தான் அந்த படத்தை எடுத்ததாகவும் கூறுகிறார்.
மேலும், தற்போது யாழ் என்ற படத்தில் அகதிகளின் தலைவனாக தான் நடித்து வருவதாக சொல்லும் அவர், நான் நடிக்கும் ஒவ்வொரு வேடமும் சமூக நலன் முன்வைத்தே இருக்கும். குறிப்பாக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று சொல்லும் சார்லஸ் ராஜ், லக்னம் என்ற படத்தில் விரைவில் ஹீரோவாகவும் நடிக்கிறாராம். இதுவும் தமிழ் சமுதாயத்துக்கான படம்தானாம்.