'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ஆதி மற்றும் நண்பர்கள், சென்னையை தலைமை இடமாக கொண்டு லெட்ஸ் பிரிட்ஜ் (Let's Bridge) என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்த தொண்டு நிறுவனம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றி நடிகர் ஆதியிடம் கேட்டபோது… “எங்களின் முதல் விழிப்புணர்வு முயற்சி “ முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி”. நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளோம். இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் “நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்” என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதிப்பார்கள். நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களும் எங்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.” என்று சொன்னார்.