தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து அதில் வெற்றி பெற முடியாமல் சீரியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் ஸ்ருதி. வந்த புதிதில் இனி எல்லாம் சுகமே, இயக்கம், ஜெர்ரி, காதல் டூயட் டாட் காம், மந்திரன் படங்களில் நடித்தார். நடித்த படம் எதுவும் ஓடவில்லை. புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சீரியலுக்கு வந்துவிட்டார். தென்றல் சீரியல் மூலம் தமிழ் மக்களின் இல்லங்களுக்குள்ளும், மனங்களுக்குள்ளும் புகுந்து கொண்டார். சமீபத்தில் தந்தையை இழந்த ஸ்ருதி தாயில்லாமல் நானில்லை என்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது கேரளாவின் சிறிய ஊர்தான் எங்கள் ஊர், சினிமா வாசனையே இல்லாத ஊர். எங்கள் உறவினர் ஒருவர் புகைப்படக்காரராக இருந்தார். நான் 7வது படிக்கும்போது என் அழகையும் துறுதுறுப்பையும் பார்த்து என்னை நிறைய போட்டோ எடுத்தார். அதில் ஒரு போட்டா மனோரமா பத்திரிகையில் அட்டை படமாக வெளிவர சினிமாவில் நடிக்க அழைத்துப்போய்விட்டார்கள். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு ஹீரோயினாக தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. இப்போது சின்னத்திரையில் இருக்கிறேன். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் கனவாக இருந்தது. ஆனாலும் நான் நடிகையாகிவிட்டதை ஏற்றுக் கொண்டார். என்னிடம் இருந்த திறமையை கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தியவர் அம்மா. அவர்தான் எனக்கு தோழியும். அவர் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. என்று உருகுகிறார் ஸ்ருதி.