ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் பி.வாசுவிடம் உதவியாளராக இருந்தவர் மூர்த்தி கண்ணன். இவர் தற்போது சாலையோரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது சாலையில் குப்பை அள்ளும் ஒரு தொழிலாளிக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதல் கதை. பெரும்பாலான காட்சிகள் குப்பை மேடுகளில்தான் நடக்கும். அதனால் இந்தப் படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் சாலையோர குப்பைகள் மற்றும் துப்புறவு தொழிலாளிகள் தொடர்பாக ஆந்திராவில் உள்ள ருஸ்மேனியாக பல்கலைகழக்தில் சில மாணவிகள் பிஎச்டி ஆய்வு செய்து வருவதாக இயக்குனருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அந்த மாணவிகளிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். அவர்களில் ஷெரீனா என்பவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கதையின் நாயகனாக ராஜ் என்பவர் நடிக்கிறார். பாண்டியராஜன் வில்லனாக, அதாவது நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். சிங்கப்பூரில் இசை பள்ளி நடத்திவரும் சேதுராம் இசை அமைத்துள்ளார்.
"சமூகத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் துப்புறவு தொழிலாளர்கள். அவர்கள் வாழ்க்கையிலும் காதல் உண்டு. மனிதநேயமிக்க ஒரு துப்புறவு தொழிலாளியை வசதி படைத்த ஒரு கல்லூரி மாணவி காதலிக்கிறாள். அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. பலர் நடிக்க பயந்தபோது ஷெரீனா பற்றி கேள்விப்பட்டு கதை சொல்லி நடிக்க கேட்டோம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் குப்பை மேட்டிலும் துப்புறவு தொழிலாளர் குடியிருப்பிலும்தான் நடக்கும் என்றோம். என் படிப்புக்காக நான் அங்கு நிறைய சென்று வந்திருக்கிறேன். என்று சொல்லி நடித்தார்" என்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன்.