ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா, இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். என்.எச் 10 என்ற படத்தை தயாரித்து நவ்தீப் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பாலைவனத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வீசிய கடும் பாலைவன புயலால் பலபேர் இறந்தனர். இந்த புயலில் அனுஷ்கா சர்மாவின் பட யூனிட்டும் மாட்டிக் கொண்டது.
மணல் புயல் வீச ஆரம்பித்ததுமே அனுஷ்கா சர்மாவையும், நவ்தீப் சிங்கையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு கேமரா உள்ளிட்ட முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மணல் புயலால் பாடல் காட்சிக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் அனைத்தும் வீணானது. இதனால் பல லட்சம் நஷ்டம் அடைந்தோடு படப்பிடிப்பும் நின்று விட்டது.
"படப்பிடிப்புக்கு போட்டிருந்த அனைத்து செட்டுகளும் சேதமைடைந்து விட்டது. பல லட்சம் ரூபாய் எனக்கு நஷ்டம்தான். ஆனால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது ஆறுதலாக இருக்கிறது. அந்த நாளை மறக்க முடியாது. காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி" என்ற தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் அனுஷ்கா சர்மா.