தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து விஜயசேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தவர், இப்போது காக்கா முட்டை, திருடன் போலீஸ் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜயசேதுபதி நடித்து வரும் இடம் பொருள் ஏவல் படத்திலும் ஐஸ்வர்யா நடிக்க கமிட்டாகியிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன. அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயசேதுபதியே அவருக்கு சிபாரிசு செய்ததாகவும் இன்னொரு செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்கிறது.
ஆனால்,. இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டால், கோபத்தில் கொந்தளித்துப்போகிறார். இதே வேலையாப்போச்சு. ரெண்டு படத்துல ஒரு நடிகருடன் சேர்ந்து நடிச்சரக்கூடாதே. உடனே காதல் கல்யாணம்னு தப்பு தப்பா செய்தி போட்டு அசிஙக்ப்படுத்திடுவீங்களே என்கிறார். மேலும், பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு முன்பே நான் ரம்மியில் கமிட்டாகி விட்டேன். அப்போது விஜயசேதுபதி எனக்கு அறிமுகமே இல்லை. அதன்பிறகுதான் பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்தனர். அந்த ஸ்பாட்டுக்கு சென்றபோதுதான் எனக்கு விஜயசேதுபதியே அறிமுகம். ஆக அந்த இரண்டு படஙக்ளிலும் நடிப்பதற்கு முன்பு வரை அவரை எனக்குத் தெரியாது.
அதோடு, சீனு ராமசாமி படத்தில் இருந்து மனீஷா விலகியப்பிறகு பல நடிகைகளிடம் நடிக்கக் கேட்டவர்கள், என்னிடமும் கேட்டனர். அதற்கு நான் சம்மதம் சொன்னேன். ஆனால் இன்னும் அட்வான்ஸ் வாங்கவில்லை. அப்படத்துக்கு என்னைக் கேட்டது விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கத்தான் என்று சொல்லும் ஐஸ்வர்யா, சினிமாவில் யாரும் யாருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்புக்கிடைக்கும். அந்த அடிப்படையில்தான் எனக்கு படங்கள் கிடைத்து வருகிறது என்கிறார்.