இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இயற்கை படத்தையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில நாயகனாக நடித்தவர் ஜீவா. அப்படத்தில் நயன்தாராதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும் ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி ஜீவாவுக்கு அப்போது கிடைத்தது.
அதனால் புறம்போக்கு படத்தை தான் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இயக்கும்போதும் ஆர்யா, விஜயசேதுபதியை புக் பண்ணிய ஜனநாதன், அதையடுத்து இன்னொரு ஹீரோவாக நடிக்க ஜீவாவைத்தான் கேட்டார். ஆனால், மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வேண்டும் என்றதும், ஏற்கனவே ரெண்டு பேர் நடித்து வரும்போது மூன்றாவது கேரக்டருக்கு அப்படி என்ன முக்கியத்தும் இருந்து விடப்போகிறது என்று அதை தவிர்க்க நினைத்தவர், இப்போது யான் படத்தில் நடித்து வரும் நான், அதையடுத்து நீயெல்லாம் நல்லா வருவடா படத்தில் நடிக்க வேண்டியுள்ளது என்று சொல்லி மறுத்து விட்டார் ஜீவா.
அதன்பிறகுதான் ஜீவா நடிக்க மறுத்த வேடத்தில் ஷாமை கமிட் பண்ணினார் ஜனநாதன். ஆனால் முதலில் ஆர்யா, விஜயசேதுபதிக்கே முக்கியத்துவம் இருப்பதாக கதை சொன்ன இயக்குனர், இப்போது ஷாமுக்கும் அவர்களுக்கு இணையான வேடமாக மாற்றி விட்டார். இந்த சேதியறிந்த ஜீவா, முதலிலே இப்படி சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேனே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.