கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக, மர்ம தொடர் அதே கண்கள். நிமோ புரொடக்ஷன் சார்பில் கே.பாலு தயாரிக்கிறார். மூன்று குடும்பங்களுக்குள் நடக்கும் மர்மமான விஷயங்களை காட்சிப் படுத்தி திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. மகேஸ்வரி, பாரதி, பரத்கல்யாண், மித்ரன், சிவன் சீனிவாசன், சிவகவிதா, சாய்ராம், நேசன், வசந்த், வனஜா, தீபா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
தற்போது இதன் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தாண்டத்தில் நடந்து வருகிறது. தொடர்குறித்து தயாரிப்பாளர் கே.பாலு கூறியதாவது:
இந்த தொடருக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு பெருகி உள்ளது. 50 எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கும் உயர்ந்திருக்கிறது. 300 எபிசோடுகளுக்குத்தான் திட்டமிட்டிருந்தோம். சேனல் நிர்வாகம் ஆயிரம் எபிசோடுகள் வரை கொண்டு வாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் கதை இலாகா அதற்கேற்றார்போல கதையில் பல டுவிடஸ்டுகளை வைத்து ஸ்கரிப்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.