பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள், வருகிற ஜுன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தம்பியின் காதலுக்கு குடும்பத்தில் யாரும் தடை சொல்லவில்லை என்றார்.
அவர் அளித்த பேட்டி: எங்கள் குடும்பத்தில் யாரும் காதலுக்கு எதிரியில்லை. நான் காதலித்து திருமணம் செய்யவில்லை. தம்பிதான் எங்கள் குடும்பத்தில் முதன் முறையாக காதலித்திருக்கிறான். அவன் காதல் எங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் அண்ணனாக இருந்தாலும் அவன்தான் குடும்பத்தின் தலைவன். அவன் சுதந்திரமாக முடிவெடுக்க உரிமை இருக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவு செய்வில்லை. ஜுன் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியில் இருக்கும்.
நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ரிலீசாகவில்லை. தற்போது ஆவி குமார் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது காமெடி திரில்லர் கதை. கனிகா திவாரி ஜோடியாக நடிக்கிறார். அடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன். காரைக்குடி பைனான்ஸ் என்ற காமெடி கதை வைத்திருக்கிறேன். அதை நானே இயக்கி, தயாரித்து நடிக்க இருக்கிறேன். தெலுங்கு படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறேன். நல்ல முக்கியத்துவம் இருந்தால் தமிழிலும் கேரக்டர் ரோலில் நடிப்பேன். என்கிறார் உதயா.