சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
சசி இயக்கிய பூ, சற்குணம் இயக்கிய களவாணி உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எஸ்.குமரன். இவரது இசை பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நேரம், தேனீர் விடுதி என்ற படம் மூலம் திடீரென்று இயக்குனராக உருவெடுத்த அவர், சமீபத்தில் கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தையும் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.
இதனால் மற்ற படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், தற்போது சில இயக்குனர்கள் மீண்டும் அவரை இசையமைக்க அழைத்ததால் தயாரிப்பு, இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு, மீண்டும் முழுநேர இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் எஸ்.எஸ்.குமரன்.
இதுபற்றி அவர் கூறுகையில், பூ, களவாணி படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்ததாக சொல்லி, அதன்பிறகு பல இயக்குனர்கள் என்னை இசையமைக்க அணுகி வந்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட இயக்குனர் ஆசையினால் வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு பாதையை மாற்றியமைத்தேன்.
இந்நிலையில், தற்போது சில சில திரையுலக நண்பர்கள், தங்கள் படங்களுக்கு இசையமைத்து தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு என்னை மீண்டும் இசையமைப்பாளராக திருப்பி விட்டனர். அதனால் எனது திறமைக்கேற்ற தீனி போடும் கதைகளாக தேர்வு செய்து தொடர்ந்து இசையமைக்க தயாராகி விட்டேன்.
முதல் படமாக இனிப்பும் காரமும் என்ற படத்திற்கு இசையமைக்கிறேன். ராஜசேகர் என்பவர் இயக்கும் இப்படத்தில் வானவராயன் வல்லவராயன், பஞ்சுமிட்டாய் படங்களில் நடித்து வரும் ம கா பா ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். இப்படமும் களவாணி போன்று ஒரு கலகலப்பான படம். காமெடி என்டர்டெயின்மென்ட். இப்படத்தில் நா.முத்துக்குமார், கபிலன் பாடல்களை எழுதுகிறார்கள.
மேலும், இந்த படத்தில் வித்தியாசமான சவுண்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் இதுவரை கேட்டிராத சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்துகிறேன். அதோடு, இப்படத்தில் 3 நிமிட ஒரு தீம் மியூசிக் உள்ளது. காதலை சொல்லும் அந்த காட்சியில் இசை மூலமே காதலர்கள் பேசிக்கொள்வார்கள். அந்த காட்சிக்கு நான் உருவாக்கியிருக்கும் இசையை, இளவட்ட ரசிகர்கள் பெரிய அளவில் ரசிப்பார்கள். அப்படியெரு புதிய டோனை காண்பித்திருக்கிறேன் என்று கூறும் எஸ்.எஸ்.குமரன், இனி என் முழுக்கவனமும் இசை மீதுதான் இருக்கும். பூ, களவாணியைத்தாண்டி புதிய பரிணாமத்துடன் எனது இசையை வெளிப்படுத்துவேன். அந்த வகையில், இனி பழைய குமரனை புதுப்பொலிவுடன் பார்க்கலாம் என்கிறார்.