Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் முழுநேர இசையமைப்பாளராகிறார் எஸ்.எஸ்.குமரன்!

20 ஏப், 2014 - 13:59 IST
எழுத்தின் அளவு:

சசி இயக்கிய பூ, சற்குணம் இயக்கிய களவாணி உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எஸ்.குமரன். இவரது இசை பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நேரம், தேனீர் விடுதி என்ற படம் மூலம் திடீரென்று இயக்குனராக உருவெடுத்த அவர், சமீபத்தில் கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தையும் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.

இதனால் மற்ற படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், தற்போது சில இயக்குனர்கள் மீண்டும் அவரை இசையமைக்க அழைத்ததால் தயாரிப்பு, இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு, மீண்டும் முழுநேர இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் எஸ்.எஸ்.குமரன்.

இதுபற்றி அவர் கூறுகையில், பூ, களவாணி படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்ததாக சொல்லி, அதன்பிறகு பல இயக்குனர்கள் என்னை இசையமைக்க அணுகி வந்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட இயக்குனர் ஆசையினால் வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு பாதையை மாற்றியமைத்தேன்.

இந்நிலையில், தற்போது சில சில திரையுலக நண்பர்கள், தங்கள் படங்களுக்கு இசையமைத்து தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு என்னை மீண்டும் இசையமைப்பாளராக திருப்பி விட்டனர். அதனால் எனது திறமைக்கேற்ற தீனி போடும் கதைகளாக தேர்வு செய்து தொடர்ந்து இசையமைக்க தயாராகி விட்டேன்.

முதல் படமாக இனிப்பும் காரமும் என்ற படத்திற்கு இசையமைக்கிறேன். ராஜசேகர் என்பவர் இயக்கும் இப்படத்தில் வானவராயன் வல்லவராயன், பஞ்சுமிட்டாய் படங்களில் நடித்து வரும் ம கா பா ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். இப்படமும் களவாணி போன்று ஒரு கலகலப்பான படம். காமெடி என்டர்டெயின்மென்ட். இப்படத்தில் நா.முத்துக்குமார், கபிலன் பாடல்களை எழுதுகிறார்கள.

மேலும், இந்த படத்தில் வித்தியாசமான சவுண்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் இதுவரை கேட்டிராத சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்துகிறேன். அதோடு, இப்படத்தில் 3 நிமிட ஒரு தீம் மியூசிக் உள்ளது. காதலை சொல்லும் அந்த காட்சியில் இசை மூலமே காதலர்கள் பேசிக்கொள்வார்கள். அந்த காட்சிக்கு நான் உருவாக்கியிருக்கும் இசையை, இளவட்ட ரசிகர்கள் பெரிய அளவில் ரசிப்பார்கள். அப்படியெரு புதிய டோனை காண்பித்திருக்கிறேன் என்று கூறும் எஸ்.எஸ்.குமரன், இனி என் முழுக்கவனமும் இசை மீதுதான் இருக்கும். பூ, களவாணியைத்தாண்டி புதிய பரிணாமத்துடன் எனது இசையை வெளிப்படுத்துவேன். அந்த வகையில், இனி பழைய குமரனை புதுப்பொலிவுடன் பார்க்கலாம் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in