தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கான மவுசு எகிறியதால் சந்தானம், சூரி உள்ளிட்ட காமெடியன்களின் மார்க்கெட் எகிறிக்கொண்டே சென்றது. குறிப்பாக, சந்தானத்தின் கால்சீட் கிடைத்தால் போதும் என்று படாதிபதிகள் நடையாய் நடந்ததோடு, அவர் கால்சீட் தரும் வரை காத்திருந்து நடிக்கவும் முன்னணி ஹீரோக்களே தங்களை தயார்படுத்திக்கொண்டனர்.
ஆனால். இதைப்பார்த்த சந்தானத்துக்கு ஹீரோக்களே நம்ம தயவை எதிர்பார்க்கிறபோது நாமே ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்ற யோசனை தோன்ற, வல்லவனுக்கு புல்லும ஆயுதம் படத்தில் நானும் ஹீரோவாகப்போறேன் என்று மீசையை முறுக்கி விட்டபடி நடித்தார். அதோடு, இனி நானும முழுநேர ஹீரோதான் என்று கூறிவிட்ட சந்தானம், தன்னை நோக்கி படையெடுக்கும் டைரக்டர்களிடம் பல கோணங்களில் அமர்ந்து தீவிரமாக கதையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனது நட்பு வட்டார ஹீரோக்கள் சிலரை அவர் கைவிடவில்லை. குறிப்பாக, ஆர்யா, உதயநிதி உள்ளிடட சில குறிப்பிடத்தக்க நடிகர்களின் படங்களுக்கு கால்சீட் கொடுக்க முன்வந்துள்ளார். இதைப்பார்த்த மேலும் சில ஹீரோக்களும் அவரை அணுகியபோது, ஆர்யா, உதயநிதியெல்லாம் எனது நண்பர்கள். நட்புக்கு எப்போதுமே நான் முன்னுரிமை கொடுப்பவன் என்பதால், அவர்கள் படங்களில நடிக்கிறேன். மற்றபடி நானும் இனிமேல் ஹீரோதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தில்லாக கூறுகிறாராம்.
இதனால், சிலர் ரூட்டை மாற்றி சூரி போன்ற காமெடியன்களை நாடிச்சென்று விட்டபோதும், இன்னும் சிலரோ, அவர் ஹீரோவாக நடித்துள்ள படம் முதலில் தியேட்டருக்கு வரட்டும். ஒருவேளை எதிர்பார்த்த ஹிட் இல்லை என்றால் மறுபடியும் சந்தானம் காமெடிப்பக்கம் வந்துதானே ஆக வேண்டும். அதுவரைக்கும் பொறுமையாக இருப்போம் என்று அவருக்காக காத்திருக்கின்றனர்.