ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கும் அண்ணனைப்போல பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசை. டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் அறிமுகமானர். அந்த படம் வெற்றி அடையாததால் சத்யாவும் வெளியே தெரியாமல் போனார். அதன் பிறகு ராட்டினம் தங்கசாமி தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானை படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவருவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தன் சொந்த தயாரிப்பு மூலம் தம்பியை ஹீரோவாக்க முடிவு செய்த ஆர்யா தனது தி ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் அமரகாவியம் படத்தை தயாரித்து அதில் தம்பியை நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி அறிமுகமான நான் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர் அமரகாவியத்தை இயக்கி உள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டநிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர் படம் பற்றி கூறியதாவது:
சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்தே அது காதலை பேசி வருகிறது. காதல் ஒரு நூல் இழை மாதிரி அதை நெய்பவர்களை பொறுத்து அழகாக மாறும். நானும் அந்த காதலை என்னால் முடிந்த அளவிற்கு அழகுபடுத்தி இருக்கிறேன். இதுவரை படப்பிடிப்பு நடந்திராத பகுதிகளை தேர்ந்தெடுத்து படமாக்கி இருக்கிறேன். ஒரு ஒளிப்பதிவாளராக நான் இடங்களை தேர்வு செய்து படம் பிடித்திருக்கிறேன். அமரகாவியம் எல்லோருடைய காதலையையும் மீட்டுத் தருகிற படமாக இருக்கும். என்கிறார் ஜீவா ஷங்கர்.