ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளானதால் கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் உட்கார்ந்திருந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தெனாலிராமன் படம் நேற்று வெளியானது. அதை ஒட்டி, ஆளும்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியில் வடிவேலுவின் பேட்டி ஒளிபரப்பானது. இதுநாள்வரை தன்னை தள்ளியே வைத்திருந்தவர்கள், தன்னுடைய பேட்டியை ஒளிபரப்பும் அளவுக்கு இறங்கி வந்ததும் உற்சாகமானார் வடிவேலு. தன் மீதான ஆளும்கட்சியின் கோபம் தீர்ந்துவிட்டது என்று எண்ணி புளகாங்கிதப்பட்டு தனக்கு நெருக்கமான பலருடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
வடிவேலுவின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தெனாலிராமன் படத்துக்கு வரிவிலக்கு கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாங்கவே இல்லையாம். சரியானமுறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி விண்ணப்பத்தை வாங்காமலே தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆட்களை திருப்பி அனுப்பி விட்டனராம். இந்த விஷயம் வடிவேலு காதுக்கு வந்ததும் வைகைப்புயல் வாடிப் போய்விட்டாராம்.