தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ஆருஷி அடித்தளம், வேல்முருகன் போர்வெல்ஸ் படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆருஷி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் வந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷ்வா, விஜயராஜ் என்ற இரண்டு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். கே.எஸ்.புனித்குமார் இயக்குகிறார். ஸ்வாதி சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.ரவி கணபதி தயாரிக்கிறார்.
"தேசியபுரம் என்ற கிராமத்தில் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தை சேர்ந்த ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் வருகிறது. காதலுக்கு அந்த ஊர் எதிரியல்ல. ஆனாலும் இவர்கள் காதலை எதிர்க்கிறார்கள். அது ஏன் என்பதுதான் கதை. இந்தியா முழுமைக்குமான ஒரு பிரச்னைய சொல்வதால் தெலுங்கு, இந்தியிலும் எடுக்குறோம். முதல்கட்ட படப்பிடிப்புகள் மூணார் பகுதியில் 30 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நடக்க இருக்கிறது" என்கிறார் இயக்குனர் புனித்குமார்.