பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான சால்ட் அண்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். தெலுங்கு, கன்னடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ரீமேக் செய்கிறார். அவரே இயக்கி, நடிக்கவும் செய்கிறார். ஏன் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் நடித்து இயக்க வேண்டும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் அளித்துள்ள விளக்கம் இது.
ஒரு மனுஷனக்கு முக்கியமான தேவை இரண்டுதாங்க அது உணவு, காதல். இந்த இரண்டையும் அற்புதமா, அழகா காட்டின படம்தான் சால்ட் அண்ட் பெப்பர். உலக மொழிகள் அத்தனையிலும் இந்தப் படத்தை எடுக்கலாம். என்கிட்ட அத்தனை வசதியில்லை. அதனாலதான் எனக்கு தெரிஞ்ச மொழிகள்ல எடுக்குறேன். மூன்று மொழிகளும் வெவ்வேறாக இருந்தாலும் உணர்வு ஒன்றுதானே. மூன்று மொழிகளில் நான் நடித்தாலும் மற்ற கேரக்டர்களுக்கு அந்தந்த மொழி கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒரு படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாரித்து, இயக்கி நடிக்கிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். பல நல்ல விஷயங்கள் இருக்கிற படத்தை பல மொழிகளில் பண்ணுவதில் தவறு எதுவும் இல்லையே. மூணு மொழிகள்லேயும் நல்ல வரவேற்பு நிச்சயம் கிடைக்கும். என்கிறார் பிரகாஷ்ராஜ்.