ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜா, தமிழில் ஜெகன்மோகினி, கண்ணா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தாராபுரத்தை சேர்ந்த ராஜாவின் குடும்பம் ஆந்திராவில் செட்டிலாகிவிட்டதால் தெலுங்கு நடிகராகி விட்டார்.
ராஜாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வின்செண்டின் மகள் அம்ரிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அம்ரிதா சர்வதேச நிறுவனம் ஒன்றில் புராஜக்ட் மானேஜராக இருக்கிறார். இருவருக்கும் வருகிற 24ந் தேதி மாலை 5 மணிக்கு நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது. அதைதொடர்ந்து மாலை 7 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தனது திருமணம் பற்றி ராஜா கூறியதாவது: நான் தமிழ்நாட்டுக்காரன். அப்பாவின் வேலை நிமித்தமாக ஆந்திரா சென்றதால் அங்கேயே செட்டிலாகிவிட்டோம். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் 32 படங்களில் நடித்திருக்கிறேன். 5 மாநில விருதுகளை பெற்றிருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க முக்கியத்தும் கொடுப்பேன். என்றார் ராஜா.