ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா உலகைப்பொறுத்தவரை பார்ட்டி வகையறாக்கள் அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால், முன்பெல்லாம் சத்தமில்லாமல் நடந்த சமாச்சாரம சமீபகாலமாக வெளிப்படையாகவே நடக்கிறது. மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் நடிகைகளும் ஆல்ஹகாலில் மூழ்கி விட்டு தலைதெறிக்க ஆட்டம் போடுகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தனது 41வது பிறந்த நாளையொட்டி பாலிவுட் நடிகர்-நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்த பிரபுதேவா, கோலிவுட் நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுத்தார். அவரையடுத்து நடிகர் விஷால், நான் சிகப்பு மனிதன் படத்தின் வெற்றிக்காக பார்ட்டி கொடுத்தார். அதையடுத்து, நடிகர் சித்தார்த்தும் தனது 35வது பிறந்த நாளையொட்டி சில தினங்களுக்கு முன்பு பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
ஆனால், மற்ற பார்ட்டிகளில் எல்லாம் காரசாரமான உணவுகள், மயக்கும் மதுபானங்கள் இருக்கும். ஆனால் இவர் கொடுத்த பார்ட்டியிலோ அப்படி எதுவும் இல்லையாம். பியூர் வெஜிடேரியன் அயிட்டங்களாக வந்தவர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். இதனால், அவரது அழைப்பை ஏற்று வந்தவர்கள் வேண்டாத வெறுப்பாய் சாப்பிட்டு விட்டு சென்றார்களாம்.
ஆனால், அவரது அபிமானத்திற்குரிய சமந்தா மட்டும், ஆசை ஆசையாய் சாப்பிட்டு விட்டு காதல் நாயகன் சித்தார்த்துக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சென்றாராம்.