கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கேரளாவைச் சேர்ந்த நீனு கார்த்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. உடனே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், வைதேகி, முத்தாரம் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். இப்போது புதிய சீரில்களில் நடிக்க பேசி வருகிறார். கிடைத்த சின்ன கேப்பில் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைத் தேடி சில மலையாள சீரியல் வாய்ப்புகள் வந்ததை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது "தமிழில் இரண்டு சீரியல்கள் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறேன். தேர்தல் பரபரப்பு அடங்கியதும் முறையான அறிவிப்பு வரும். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். சில சினிமா வாய்ப்புகள் வந்தது. மலையாள சீரியல் வாய்ப்புகளும் வந்தது. என்னை வாழ வைத்தது தமிழ் சீரியல்கள்தான். அதற்குத்தான் முக்கியத்தும் தருவேன்" என்கிறார் நீனு கார்த்திகா.