தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுண்டமணி-செந்திலுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகராக 15 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டிப்பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கறுப்பு நாகேஷ் என்று சினிமா கலைஞர்களால் புகழப்பட்டு வந்த அவர், அரசியல் சுனாமிக்குள் சிக்கியதால் சிலகாலம் சிறகொடிந்து போனார். அந்த நேரத்தில், வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் உரிய அங்கீகாரம் இல்லாதவை என்பதால் அவர்களுக்கிடையே பெரிய போர் வெடித்தது. இதனால் இருவரும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தியதோடு, போலீஸ் ஸ்டேசனுக்கும் ஏறி இறங்கினார்கள்.
பின்னர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்காததால், அவர் கதை முடிந்து விட்டது என்றுதான் சிங்கமுத்து போன்ற அவருக்கு எதிரானவர்கள் நினைத்துக்கொண்டனர். ஆனால், இப்போது மீண்டும் கதாநாயகனாகவே வடிவேலு அடுத்த ரவுண்டை அமோகமாக ஆரம்பித்திருப்பதால் செம காண்டில் இருக்கிறார் சிங்கமுத்து.
அதனால், தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் எந்நேரமும் வடிவேலுவைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறாராம். குறிப்பாக கேரவனுக்குள் அமர்ந்து கொண்டு, வடிவேலுவின் நடிப்பு குறித்தும், அவரது ரீ-என்ட்ரி குறித்தும் வடிவேலுவின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாராம் சிங்கமுத்து.