பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் ஆட்டோ நகர் சூர்யா, மனம் படங்களில் நடித்து முடித்து விட்ட சமந்தா, அடுத்து பெயரிடப்படாத 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழிலும் கால் பதித்திருப்பவர், விஜய்யின் கத்தி, சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்து வருபவர், அடுத்து கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கும் கமிட்டாகியுள்ளார்.
இதனால் புதிதாக தெலுங்கு படங்களுக்கான கதை கேட்பதை குறைத்து விட்ட சமந்தா, தமிழில் முழுவீச்சில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அதன்காரணமாக, மேலும் சில முன்னணி டைரக்டர்களும் சமந்தா பக்கம் திரும்பியுள்ளனர். விளைவு, தமிழ் சினிமாவையே நம்பியிருக்கும் நயன்தாரா, லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகளுக்கு, தங்களுக்கான புதிய வாய்ப்புகளை சமந்தா தட்டிப்பறித்துக்கொள்வாரோ என்ற பயம் அதிகரித்துள்ளது.
இதில் நயன்தாரா, தமிழில் சிம்பு, ஜெயம்ரவி படங்கள் இருந்தபோதும், புதிய படங்கள் கமிட்டாவது தாமதமாவதால், அனாமிகா ரிலீசானதும் தெலுங்கில் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் சென்னையில் முகாமிட்டிருக்கும் அவர், அடிக்கடி ஐதராபாத் விசிட் அடிக்கிறார். அவரைத் தொடர்ந்து லட்சுமிமேனனும் தற்போது திலீப்புடன் ஒரு மலையாள படத்தில் நடிப்பவர், அடுத்து கூடுதலான மலையாளப்படங்களை கைப்பற்றுவதற்காக தற்போது கேரளாவுக்கு விசிட் அடித்திருக்கிறார்.