ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாளை (ஏப்ரல் 18) தமிழ்நாட்டுக்குள் முதன் முறையாக பிலிம் காட்டிய சாமிக்கண்ணு வின்செண்ட்டுவின் பிறந்தாள்.றஇவர்தான் முதன் முறையாக கோயம்புத்தூரில் தியேட்டர் கட்டியவர். இவரின் பிறந்த நாளை திரையரங்குகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கருத்து நிலவி வந்ததது. இந்த ஆண்டுமுதல் சாமிக்கண்ணுவின் பிறந்த நாளை திரையரங்குள் தினமாக கொண்டாட தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையரங்குகளின் தலைமகன் சாமிக்கண்ணு வின்செண்ட்டின் பிறந்த தினமான ஏப்ரல் 18-ஜ திரையரங்குள் தினமாக கொண்டாட சங்கம் முடிவு செய்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் அன்றையதினம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.