‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது. இப்போது நான் குடும்ப ஸ்திரியாகி விட்டேன். அதனால் என் இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர்.
ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் மட்டும் தனது கதைக்கு ஒரு மெச்சூரிட்டியான கேரக்டர்தான் வேண்டும் என்பதால் சினேகாவை நடிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து விடியல் என்ற படத்தில் மட்டும் நடிக்கும் சினேகா, இப்போது பாடலாசிரியர் சினேகன் நடித்து வரும் ராஜராஜசோழனின் போர்வாள் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், 1100 வருடங்களுக்கு முந்தைய காலத்து கதையில் உருவாகும் இப்படத்தில் அந்த காலகட்டத்து பெண்மணியாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு சினேகா நடிப்பது போன்று, சிவாஜி கேர்ள் ஸ்ரேயாவும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம். ஆரம்பத்தில் கேரக்டர் ரோல் என்றதும் தயங்கிய இவர்கள், படத்தின் கதையை சொன்னதும் உடனே ஓ.கே சொல்லி விட்டார்களாம். தற்போது 25 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும்போது அவர்கள் இருவருமே ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்து தமிழச்சிகளாக மாறப்போகிறார்களாம்.