விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாராளுமன்ற தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, வாக்கு சேகரிப்பதில் படு வேகம் காட்டுகிறார். இந்நிலையில், கடந்த 13-ந்தேதிதான் ரஜினியை சந்தித்தார். அதையடுத்து, இது அரசியல் சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று சொன்ன ரஜினி, மோடி ஒரு வலிமையான மனிதர். தகுதி வாய்ந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினர். இந்நிலையில், அடுத்த மூன்றே நாட்களில் கோவையில் விஜய்யை சந்தித்தார் மோடி. அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இதையடுத்து மீடியாக்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டு, சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று துருவி துருவி கேட்டதற்கு விஜய் பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக அவர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, மோடியை சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ரஜினி பாணியிலேயே கூறியுள்ளார் விஜய். மோடி நாட்டின் மிகப்பெரிய தலைவர். கடந்தமுறை அவர் சென்னை வந்தபோது என்னை சந்திக்க விரும்பினார். ஆனால் நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் சந்திக்க முடியவில்லை. மீண்டும் அவர் கோவை வந்துள்ளார். அவரே என்னை சந்திக்க விரும்பியதால், உடனடியாக அவரை சென்று சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பல் அரசியல் இல்லை. அன்பு மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார்.
ஆக, ரஜினி- விஜய் இரண்டு பேருமே அரசியல் கட்சி தலைவர் மோடி சந்தித்தின் பின்னணியில் அரசியல் இல்லை என்று சொன்னாலும் அதை நம்புவதற்கு யாரும் இங்கே தயாராகவும் இல்லை என்று ஒருசாரர் பேசிக்கொள்கிறார்கள்.