ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மற்றவர்கள் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் விழாக்களுக்கோ, புரமோஷனுக்கோ வராத சந்தானம் தன் படம் என்பதால் மீடியாக்களை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "நான் பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்" என்ற புதிய தகவலையும் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹீரோவாகவே நடிக்க ஆசைப்பட்டிருந்தால் அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது அப்போதே நடித்திருப்பேன். பயந்துதான் நடிக்கவில்லை. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் ஹீரோவாக நடிக்கும் துணிச்சலை கொடுத்தது. நான் ஹீரோவாயிட்டா காமெடியன்களுக்கு பஞ்சம் வந்திடாது. வேற ஒருத்தர் வந்து அசரடிப்பார். இப்பவே புதுசா நிறைய பேர் வந்து கலக்குறாங்க.
மற்ற படங்களோட புரமோஷனுக்கு வர்றதில்லைன்னு மைக் கிடைக்கிறவங்கதான் மேடைக்காக சொல்றாங்க. நான் நடிச்ச படத்தோட தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருக்காங்களா, ஏன்னா அவுங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் பணத்துக்காக நடிச்சதை விட நட்புக்காக நடிச்சதுதான் அதிகம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு ஹீரோவத்தான் தொடர்ந்து நடிப்பேன்னு நான் எங்கேயும் சொன்னதில்லை. மீண்டும் காமெடியனாகவும் நடிப்பேன்.
இவ்வாறு சந்தானம் கூறியுள்ளார்.