ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கிய இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. இப்படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் டெல்லி மாடல் சுரபி. அந்த படம் தோல்வியடைந்ததால், அதற்கு முன்பு வரை அவரை வட்டம் போட்ட வந்த சில படாதிபதிகள், இவர் ராசியில்லாத நடிகை என்று முடிவெடுத்து தெறித்து ஓடிவிட்டனர்.
அதனால், அடுத்தபடியாக படமே இல்லாமல் தவித்துக்கொண்டு நின்றார் சுரபி. இருப்பினும் அவர் சில கம்பெனிகளுக்கு படையெடுக்கத் தொடங்கியபோதுதான், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். அதையடுத்து, சுசீநதிரன் இயக்கும் ஜீவா என்ற படத்தையும் கைப்பற்றினார்.
தற்போது அப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருவதால், சுரபியைப் பற்றிய எந்தவித செய்திகளும் வெளியாகவில்லை. அதனால் சிலர், பட வாய்ப்பே இல்லாமல் அவர் டெல்லிக்கே திரும்பி விட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.
இந்த சேதியை அப்படியே சுரபியின் காதுகளுக்கு திருப்பி விட்ட போது, அவ்வளவு சீக்கிரத்தில் என்னை கோடம்பாக்கத்தை விட்டு யாராலும் வெளியேற்றி விட முடியாது. இப்போது தனுஷ், விஷ்ணு நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். இரண்டிலுமே எனக்கு நல்ல வேடங்கள். அதனால், இதையடுத்து நானும் தமிழில் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்று சொல்லும் சுரபி. அதன்பிறகு விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுடன் எல்லாம் ஜோடி சேரவேண்டும் என்ற பெரிங்கனவே எனக்கு உள்ளது. அந்த கனவு நனவாகும் வரை டெல்லிக்கு திரும்பக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருக்கிறேன் என்கிறார்.