டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் நடைபெற்ற உன் சமையலறையில் படத்தின் ஆடியோ விழாவின்போது, இளையராஜாவை இசைக்கடவுள் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் பிரகாஷ்ராஜ். இந்த படத்துக்காக ஒரு கவிதையை அவரிடம் படித்துக்காண்பித்தபோது உடனே அதற்கு டியூன் போட்டு விட்டார். அதோடு சிறிது நேரத்தில் அதை அவரே பின்னணியும் பாடி விட்டார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த பிறகும் இளையராஜாவிடம் இருக்கும் இந்த சுறுசுறுப்பு ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. மேலும், எனது தோனி படத்திற்கு இசையமைத்தபோது நான் இளையராஜாவைப்பற்றி உணரவில்லை. ஆனால் இந்த, உன் சமையலறையில் படத்திற்கு இசையமைக்க சென்றபோதுதான் அவரிடம் நெருக்கமாக பழகினேன். அப்போதுதான் அவரை உணரத் தொடங்கினேன்.
சாதாரணமான மனிதர்களால் இந்த மாதிரியெல்லாம் செயல்படமுடியாது. அதனால் என்னைப்பொறுத்தவரை இளையராஜா ஒரு இசைக்கடவுளாகவே தெரிகிறார். மேலும், என் படத்துக்கு இசையமைப்பதோடு, எனக்கு எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார் அவர். அதன்பிறகே நான் நிதானமாக செயல்படத் தொடங்கியிருக்கிறேன். எந்தவொரு விசயத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று செய்வதில்லை. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகே திறம்பட செய்கிறேன் என்று சொல்லும் பிரகாஷ்ராஜ, என்னை வாழ்க்கையில் நெறிபடுத்தியவர் யார் என்றால் அது இளையராஜா மட்டுமே என்கிறார்.